Good Days

வரலாறு

http://good-d4ys.blogspot.com/2010/10/blog-post.html


முதுகெலும்புகளால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த
குள்ளநரியின் விருந்தாளியாய் வந்திருந்தது
மண்டையோடுகளை கிரீடமாகக் கொண்ட, குருதி தோய்ந்த
பற்களையுடைய ஓநாய்.
பிணங்களால் ஆன அரங்கில் நடந்துகொண்டிருந்தது
பன்றிகளின் களியாட்டம்.
இரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சூனியக்காரி.
வாய் தைக்கப்பட்ட, முதுகெலும்புகள் உருவப்பட்ட
கூட்டமொன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
தூரத்தில்
ஒரு நொடி மட்டுமே எழுந்த பாடல் ஒன்று ஊமையானது
ஒரு எழுத்து மட்டுமே எழுதப்பட்டிருந்த கவிதை ஒன்று முடிந்து போனது.
ஆனாலும்
கண்ணிலிருந்த நரம்பு ஒன்றை உருவி இசைத்துக்கொண்டிருந்தான்
ஒரு இளைஞன்
பொய்க்கண்ணாடி ஒன்றை உடைப்பதற்கு.
கனவிலிருந்து ஒரு சொல்லை உருவி கவிதை
எழுதிக்கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி
பொய்க்கணக்கு ஒன்றை திருத்தி எழுதுவதற்கு.
உயிரில் இருந்து உருவப்பட்ட மின்னலைக்கொண்டு
பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஒரு போர் வீரன்
மலங்களைத்தின்னும் பேய்களை விரட்டுவதற்கு.
வாய் தைக்கப்பட்ட
கண்கள் பிடுங்கப்பட்ட
கைகள் வெட்டப்பட்ட
கால்கள் ஒடிந்து போன
இரத்தம் வற்றிப்போன
ஒரு கூட்டத்தின் நடுவே தவழ்ந்து கொண்டிருந்த
ஒரு சிறுவனின் ஒற்றை கண்
கனவு கண்டுகொண்டிருந்தது முடிவில்லாமல்
நட்சத்திரம்
பட்டாம்பூச்சி மற்றும
எழுதப்படாத ஒரு வெள்ளைக்காகிதத்தின் முதல் வரியை பற்றி
Note:This piece of scribble is dedicated to Mr.Wolf(Rajapakse), Mr.Dirty fox(Manmohan singh), Mrs.Witch(Sonia gandhi) and to all those oppressors out there dreaming of ruling the world forever and ever.
வரலாறு, Pada: 7:16 AM
Copyright © 2014 Good Days Powered by Blogger - All Rights Reserved